Thursday 17 November 2016

வாழைப்பூ பிரிஞ்சி


தேவையானவை: சீரகச்சம்பா அரிசி, நறுக்கிய வாழைப்பூ - தலா 1 கப், வெங்காயம், தக்காளி - தலா 1, மிளகாய்த் தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய், பிரிஞ்சி இலை -தலா 1, கொத்தமல்லி, புதினா, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலையைப் பொரிக்க வேண்டும். வெங்காயம், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கிய பின், தயிர், வாழைப்பூ, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து மூன்று விசில் வந்ததும் கொத்தமல்லி தூவி, பரிமாறலாம்.

பலன்கள்: வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதை, தொடர்ந்து உண்டுவந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம். 

No comments:

Post a Comment