வெந்தயக் கூழ்
வெந்தயக் கூழ்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
தோல் நீக்கிய வெள்ளை உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - கால் கப்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
கருப்பட்டி - கால் கிலோ
தண்ணீர் - 3 கப் + 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, வெள்ளை உளுந்து மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் 6 மணி நேரம் ஒன்றாக ஊறவிடவும். பிறகு, தண்ணீரை வடித்து கிரைண்டரில் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கி வைக்கவும். கருப்பட்டியைப் பொடித்து 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரையும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டி எடுக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் மாவைச் சேர்த்து கட்டி விழாமல் 10 நிமிடங்கள் கிளறவும். இத்துடன் கருப்பட்டிக் கரைசலை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து கட்டி விழாமல் கலக்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் கிளறி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு:
காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடம்பில் சூடு தணியும்

No comments:
Post a Comment