Tuesday, 4 October 2016

கருவாடு பத்திய குழம்பு

கருவாடு பத்திய குழம்பு

கருவாடு பத்திய குழம்பு

 

தேவையானவை:

 

 சுறா கருவாடு - 100 கிராம்

 முழு மிளகு - 2 டீஸ்பூன்

 ஓமம் - 2 டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

 சுக்கு - கால் அங்குலம்

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 பூண்டு - 10 பல்

 நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

 சின்னக் கத்திரிக்காய் - 3 (நீள நீளமாக நறுக்கவும்)

 முருங்கைக்காய் - ஒன்று (விரல் அளவு நறுக்கவும்)

 தக்காளி - 2 (நறுக்கியது)

 கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு

 

செய்முறை:

 

வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், ஓமம், முழு மிளகு, சுக்கு, மல்லித்தூள் (தனியாத்தூள்), பூண்டு என தனித்தனியாக பொன்னிறமாகப் பொரித்து எடுத்து ஆறவிடவும். பிறகு, மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பொரித்தவற்றைச் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சுத்தம் செய்த கருவாடு, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். கருவாடு மற்றும் காய்கறிகள் வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது கறிவேப்பிலை தூவி இறக்கிப் பரிமாறவும்.

 

குறிப்பு:

 

கருவாடு பிடிக்காதவர்கள் ஃப்ரெஷ்ஷான வஞ்சிரம் மீன் வைத்து, இந்தக் குழம்பை செய்யலாம். குழந்தை பிறந்தவர்களுக்கு மருந்துச் சோற்றில் இந்த குழம்பை ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தை பெற்றவர்களின் உடல் வலுவுக்கு இது பெரிதும் உதவிடும். சைவ உணவு சாப்பிடுபவர்கள், கருவாட்டுக்கு பதில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். சுக்கு போன்ற மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டதால், நார்மல் புளிக்குழம்பு போல இருக்காது. புளி சேர்க்காத மருந்துக் குழம்பு இது.

 

No comments:

Post a Comment