செம்பருத்திக் கஷாயம்
செம்பருத்திக் கஷாயம்
தேவையானவை:
செம்பருத்திப் பூ - 10
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
10 செம்பருத்திப் பூக்களில் இருந்து இதழ்களை மட்டும் பிரித்து சுத்தம் செய்யவும். அடுப்பில் மண் சட்டியை வைத்து சூடானதும், செம்பருத்தி இதழ்களைப் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் தண்ணீர் பாதியாகச் சுண்டுகிற அளவு காய்ச்சவும். அடுப்பை அணைத்து மூடி போட்டு அரை மணி நேரம் கழித்து, வடிகட்டி காலையிலும் மாலையிலும் சம அளவு எடுத்துக்கொண்டு சாப்பிடலாம்.
குறிப்பு: இதயத்தை வலுப்படுத்தி இதயநோய்கள் ஏற்படாமல், ஆரோக்கியமாக வாழ, செம்பருத்திக் கஷாயம் உதவும்.
No comments:
Post a Comment