Monday, 3 October 2016

கத்திரிக்காய்+முருங்கைக்காய் சாம்பார்

கத்திரிக்காய்+முருங்கைக்காய் சாம்பார்

கத்திரிக்காய்+முருங்கைக்காய் சாம்பார்

 

தேவையானவை:

 

 துவரம் பருப்பு - 200 கிராம்

 கத்திரிக்காய் - 3 (சிறியது)

 முருங்கைக்காய் - 2

 சாம்பார் வெங்காயம் - 10 (தோல் நீக்கி இரண்டாக நறுக்கி வைக்கவும்)

 தக்காளி - 1 (மீடியம் சைஸில் நறுக்கவும்)

 துருவிய தேங்காய் - கால் டீஸ்பூன்

(கால் கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்)

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்

 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

(பொடியாக நறுக்கவும்)

 விளக்கெண்ணெய் - சிறிதளவு

 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (கரைத்து வடிகட்டவும்)

 

தாளிக்க:

 

 எண்ணெய்/நெய் - 3 டீஸ்பூன்

 கடுகு - அரை டீஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 சோம்பு - அரை டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

 

துவரம் பருப்பைக் கழுவி தண்ணீர் ஊற்றி, சில சொட்டுக்கள் விளக்கெண்ணெய் விட்டு, வேக வைத்து, தனியாக வைக்கவும். காய்கறிகளைக் கழுவி விருப்பமான வடிவத்தில் நறுக்கி தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கவும். இதில் கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சாம்பார் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வேக வைத்த துவரம் பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு, கொத்தமல்லித்தழை, துருவிய தேங்காய் சேர்த்து மூடி போட்டு, காய்கறிகள் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் புளிக்கரைசல் ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து சாம்பாரில் ஊற்றிக் கலக்கிப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment