Tuesday, 4 October 2016

கட்டா சாவல் / கட்டா புலாவ் ரெசிப்பி

கட்டா சாவல் / கட்டா புலாவ் ரெசிப்பி

கட்டா சாவல் / கட்டா புலாவ் ரெசிப்பி

 

தேவையானவை:

 

கட்டா செய்ய கடலை மாவு - அரை கப்

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 ஓமம் - கால் டீஸ்பூன்

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

புலாவ் செய்ய தேவையானவை:

 

 பாஸ்மதி அரிசி - ஒரு கப்

 வேகவைத்த பச்சைப் பட்டாணி - கால் கப்

 பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)

 மல்லித்தூள் (தனியாத்தூள் கால் டீஸ்பூன்

 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 பட்டை - 2

 கிராம்பு - 2

 ஏலக்காய் - 2

 பிரிஞ்சி இலை - 2

 உப்பு - தேவையான அளவு

 மஞ்சள்தூள்  - கால் டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

 மாதுளை முத்துக்கள் - கால் கப் (விருப்பப்பட்டால்)

 எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

கட்டா செய்ய கொடுத்துள்ளவற்றை எல்லாம் ஒரு பவுலில் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு திக்கான மாவாக நன்கு பிசைந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மாவு வேகும் அளவுக்கான தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும். பிசைந்த மாவை உள்ளங்கையில் வைத்து உருளை வடிவத்தில் உருட்டி, தண்ணீரில் சேர்த்து வேகவிடவும். மாவு வெந்ததை 'டூத்பிக்' கொண்டு குத்தி பார்த்துத் தெரிந்துகொள்ளவும். டூத்பிக்கில் மாவு ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டது என்பதை அறியலாம்.மாவு வெந்ததும் தண்ணீரை இறுத்து ஆறவிடவும். ஆறிய பிறகு சின்னச்சின்ன துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

 

பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்கு கழுவி பிரஷர் குக்கரில் ஒன்றரையில் இருந்து இரண்டு கப் தண்ணீர் வரை ஊற்றி, இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு ஃபோர்க்கால் வெந்த அரிசியை நன்கு கிளறிவிட்டுக் கொள்ளவும்.

 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம்மாற நன்கு வதக்கவும். இத்துடன் வேகவைத்த கட்டா சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, பச்சைப் பட்டாணி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். மசாலா சட்டியோடு ஒட்டி தீய்ந்து விடாமல் இருக்க, சிறிது தண்ணீரை விட்டு கிளறவும். பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மசாலா படும்படி நன்கு கிளறி, கொத்தமல்லித்தழை, மாதுளை முத்துக்கள் தூவிப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment