Monday, 3 October 2016

செளசெள கூட்டு

செளசெள கூட்டு

செளசெள கூட்டு

 

தேவையானவை:

 

செளசெள - 200 கிராம் (மீடியமான சைஸில் நறுக்கவும்)

பாசிப்பருப்பு - 100 கிராம்

கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பெரியவெங்காயம் - 1 சிறியது (பொடியாக நறுக்கவும்)

மீடியம் சைஸ் தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

 

அரைக்க:

 

தேங்காய்த்துருவல் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - அரை டீஸ்பூன்

 

தாளிக்க:

 

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உளுந்து - கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

சீரகம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கடுகு - அரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் இருபது நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைக்கவும். பருப்புகளைத் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். குழைத்துவிட வேண்டாம். வெந்த பருப்புக் கலவையில் வெங்காயம், தக்காளி, செளசெள சேர்த்துக் கலக்கி அரைத்த விழுதைச் சேர்த்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விடவும். செளசெள வெந்ததும் இறக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்து செளசெளவில் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment