புரோக்கோலி பிரியாணி
புரோக்கோலி பிரியாணி
தேவையானவை:
சேமியா - ஒன்றரை கப்
மீடியம் சைஸ் புரோக்கோலி - 1 (சின்னச்சின்ன பூக்களாக வெட்டவும்)
நசுக்கிய இஞ்சி - 2 சின்ன துண்டு
நசுக்கிய பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 4 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 2
ஏலக்காய் - 2
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா- சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, சிறிது எண்ணெய் விட்டு சேமியாவை கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை வறுத்துத் தனியாக வைக்கவும். அடுப்பில் நான்-ஸ்டிக் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு போட்டுப் பொரிந்ததும் கடலைப்பருப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து லேசாக வதக்கவும். இதில் இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு, தக்காளியைச் சேர்த்து மசியும் வரை நன்கு வதக்கவும். இனி புரோக்கோலி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும். இதில் இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது வறுத்த சேமியாவைச் சேர்த்து வதக்கி வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment