Friday 7 October 2016

கருணைக்கிழங்குத் துவையல்

கருணைக்கிழங்குத் துவையல்

கருணைக்கிழங்குத் துவையல்

 

தேவையானவை:

 

சிவப்பு கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு) - 200 கிராம்

 

புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

வறுத்துப் பொடிக்க:

 

காய்ந்த மிளகாய் - 2

 

உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

 

பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை

 

தாளிக்க:

 

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு

 

செய்முறை:

 

கருணைக்கிழங்கைத் தோல் சீவி நன்றாகக் கழுவி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி துருவிய கருணைக்கிழங்கைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.  மிக்ஸியில் புளி, வெல்லம், அரைத்து வைத்த பொடி, வதக்கிய கருணைக்கிழங்கு சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்துவிடவும்.

 

இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்; இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுக்கு சைட் டிஷ் ஆகவும் உபயோகிக்கலாம்.

 

குறிப்பு: வெள்ளையாக உள்ள கருணைக்கிழங்கில் காரல் இருக்கும்.  சற்று சிவந்த நிறம் உடையதாகப் பார்த்து வாங்கினால் காரல் இருக்காது.

 

தீர்வு: மூலநோய்க்கு இது கைகண்ட மருந்து.

No comments:

Post a Comment