இளநீர்ப் பொங்கல்
இளநீர்ப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - 2 கப்
பாசிப் பருப்பு - கால் கப்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
இளநீர் - 2 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் - கால் கப்
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைக்கற்பூரம் - ஒரு சிட்டிகை
தேங்காய்பல் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப் பருப்பை வறுத்து பச்சரிசியோடு சேர்த்து கழுவவும். இரண்டையும் குக்கரில் இட்டு இரு மடங்கு தண்ணீர் மற்றும் இளநீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்கவும். பிரஷர் போனதும் குக்கரைத் திறந்து சர்க்கரை, தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறவும். தேங்காயைப் பல்லு பல்லாகக் கீறி, நெய்யில் வறுத்து முந்திரி சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும். இதில் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்தால் இளநீரின் வாசனையைக் கெடுத்து விடும் என்பதால், அவை தேவையில்லை. பரிமாறும் முன்பு பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment