நாட்டுக்கோழிக் குழம்பு
நாட்டுக்கோழிக் குழம்பு
தேவையானவை:
நாட்டுக்கோழி - அரை கிலோ
சின்னவெங்காயம் - 15 (இரண்டாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 25 மில்லி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வறுத்து அரைக்க:
மல்லி (தனியா) - ஒன்றரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
பச்சரிசி - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வறுக்க தேவையானவற்றை வெறும் வாணலியில வறுத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். கோழியைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள் தடவி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுதுடன், கோழி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
No comments:
Post a Comment