மலபார் பச்சைக் காய் பிரியாணி
மலபார் பச்சைக் காய் பிரியாணி
தேவையானவை:
நெய் - 50 மில்லி
பாஸ்மதி அரிசி - 400 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா - 2
தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2 (அரை நிலா வடிவத்தில் வெட்டவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
கேரட்- பெரியது 1
பீன்ஸ் - 30 கிராம்
உருளைக்கிழங்கு - 1
காலிஃப்ளவர் - 30 கிராம்
பச்சைப் பட்டாணி - 30 கிராம்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 2 கப்
முந்திரி - 1 டேபிள்ஸ்பூன் (எண்ணெயில் பொரித்தது)
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
எலுமிச்சைப்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்களைக் கழுவி அரை அங்குல நீளத்துக்கு நறுக்கி தனியாக வைக்கவும். பாஸ்மதி அரிசியில் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசி வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அதில் தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து கூடவே தலா ஒரு ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சிறிதளவு புதினா, சிறிதளவு கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக விட்டு வடித்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொரிந்ததும் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தயிர், கொத்தமல்லித்தழை, புதினா, நறுக்கிய காய்கறிகள் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சைச்சாறு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி இந்த கிரேவியை தனியாக வைக்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில் ஒரு பங்கு கிரேவி, அதன் மேல் ஒரு பங்கு வேகவைத்த பாஸ்மதி அரிசி, அதன் மேல் ஒரு பங்கு கிரேவி இறுதியாக வேகவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து பொரித்த முந்திரி, சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி மூடி போடவும். மூடியின் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும். பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment