Friday, 7 October 2016

செட்டிநாடு மஸ்ரூம் பிரியாணி

செட்டிநாடு மஸ்ரூம் பிரியாணி

செட்டிநாடு மஸ்ரூம் பிரியாணி

 

தேவையானவை:

 

சீரகச் சம்பா அரிசி - 300 கிராம்

 

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

 

இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்

 

பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 

புதினா - அரை கைப்பிடி

 

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

 

கறிவேப்பிலை - சிறிது

 

எலுமிச்சை -1

 

சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

 

தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

 

பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)

 

நெய் - 50 கிராம்

 

எண்ணெய் - 50 மில்லி

 

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

 

மஸ்ரூம் - 300 கிராம்

 

சீரகம் -  அரை டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

செட்டிநாடு மசாலாத்தூள்:

 

பட்டை - 4

 

கிராம்பு - 2

 

ஏலக்காய் - 3

 

அன்னாசிப்பூ - 1

 

கறுப்பு ஏலக்காய் - 1

 

மிளகு - 1 டீஸ்பூன்

 

தனியா - அரை டீஸ்பூன்

 

சீரகம் - அரை டீஸ்பூன்

 

சோம்பு - அரை டீஸ்பூன்

 

ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை

 

செய்முறை:

 

செட்டிநாடு மசாலாவுக்குக் கொடுத்தவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

 

சீரகச் சம்பாவை இரண்டு முறை அலசி, தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், புதினா, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு, செட்டிநாடு மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். 600 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த இறுத்த அரிசி, மஸ்ரூம், உப்பு சேர்த்து அரிசியை முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியிருக்க வேண்டும். அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, ஒரு தோசைக்கல்லை வைக்கவும். அதன் மேல் சீரகச்சம்பா அரிசி இருக்கும் பாத்திரத்தை வைத்து தீயை சுத்தமாகக் குறைத்து மஸ்ரூமை சேர்க்கவும். மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடம் வேக விடவும். பிறகு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறிப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment