Tuesday, 4 October 2016

இஞ்சிச் சாறு

இஞ்சிச் சாறு

இஞ்சிச் சாறு

 

தேவையானவை:

 

 இஞ்சி - 50 கிராம்

 தேன் - 50 கிராம்

 கருப்பட்டி - ஒரு டீஸ்பூன்

 பெருங்காயம் - 1/8 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்

 

பொடிக்கத் தேவையானவை:

 

 அக்கரக்காரம் - 5 கிராம்

 சித்தரத்தை - 10 கிராம்

 முழுமிளகு - 5

 அதிமதுரம் - ஒரு குச்சி

 

செய்முறை:

 

பொடிக்க கொடுத்துள்ளப் பொருட்களையும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்தெடுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். இஞ்சியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி சாறு எடுத்து, 10 நிமிடங்கள் தனியே வைத்துவிடவும். பிறகு மேலே தெளிந்து நிற்கும் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் மண்சட்டியை வைத்து சூடாக்கவும். சட்டி புகையும்போது தேன், தெளிந்த இஞ்சிச் சாறு ஊற்றிக் கொதிக்க விடவும். இத்துடன் பொடித்த பொடி, மஞ்சள்தூள், சுக்குப்பொடி, கருப்பட்டி சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

 

குறிப்பு:

 

உடல் வலி மறைவதுடன் புளித்த ஏப்பம் வருவது போன்ற உபாதைகள் நீங்கும். சட்டி புகையும் போதுதான் நாம் ஊற்றுகிற தேனும், இஞ்சிச் சாற்றின் ஓரங்களும் நுரைபோல பொங்கி வரும். 10 நாளைக்கு ஒரு தடவை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து இந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதன் பிறகு அரை மணி நேரம் வரை தண்ணீர் போன்ற பானங்களைக் குடிக்கக் கூடாது. குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

 

No comments:

Post a Comment