மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு
தேவையானவை:
வெண்பூசணி - 150 கிராம்
தயிர் - 100 மில்லி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
அரைக்க:
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சரிசி - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 25 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 (உடைத்துக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
தயிரை முட்டை கலக்கும் கரண்டியால் தண்ணீர் சேர்க்காமல் க்ரீம் பதத்துக்கு அடித்து வைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மற்றும் பச்சரிசியை கால் கப் மிதமான சூடு உள்ள தண்ணீரில், இருபது நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புகள், பச்சரிசி, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைக்கவும். பூசணிக்காயை தோல் நீக்கி, மீடியம் சைஸில் நறுக்கி தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்து வைக்கவும். அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, பூசணிக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தீயை மிதமாக்கி வேக விடவும். கலவை நுரை கட்டி வரும் போது அடுப்பை அணைத்து தயிர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கி மூடி, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment