ஆட்டுக்கால் சூப் / பாயா
ஆட்டுக்கால் சூப் / பாயா
தேவையானவை:
பெரிய வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பிரிஞ்சி இலை - 10
மிளகு - 15 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
கிராம்பு - 5 கிராம்
சோம்பு - 10 கிராம்
பூண்டு - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
கொத்தமல்லிதழைத்தண்டு - 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
சீரகத்தூள் - 15 கிராம்
ஆட்டுக்கால் - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - 10 கிராம்
செய்முறை:
ஆட்டுக்காலை தீயில் நன்கு முடிகள் கருக பொசுக்கி, மஞ்சள்தூள் தேய்த்து இரண்டு முறை கழுவிக் கொள்ளவும். இதனை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஏழு விசில் விட்டு வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் கொத்தமல்லித்தழைதண்டைச் சேர்த்து வதங்கியதும், வெங்காயம்தக்காளி சேர்த்து மைய வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் வேக வைத்த ஆட்டுக்காலை அதன் தண்ணீரோடு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு பவுலில் ஊற்றவும். பரிமாறும் போது ஆட்டுக்காலுடன், சீரகத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment