Thursday 29 September 2016

மொகலாய் மோத்தி பிரியாணி

மொகலாய் மோத்தி பிரியாணி

மொகலாய் மோத்தி பிரியாணி

 

தேவையானவை:

 பாஸ்மதி அரிசி - அரை கிலோ

 பனீர் - 400 கிராம்

 வேக வைத்து அரைத்த பாலக்கீரை - 50 கிராம்

 டொமேட்டோ பியூரி - 2 டேபிள்ஸ்பூன்

 வெள்ளை மிளகு - 100 கிராம்

 பால் - 50 மில்லி

 தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

 கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 150 கிராம்

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

 தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 குங்குமப்பூ - சிறிதளவு

 எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி (சாறு எடுக்கவும்)

 நெய் - 50 மில்லி

 எண்ணெய் - 100 மில்லி

 பட்டை - 1

 கிராம்பு - 2

 ஏலக்காய் - 2

 பிரிஞ்சி இலை - 1

 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - 50 கிராம்

 புதினா இலை - 50 கிராம்

 

செய்முறை:

பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். பனீரை விருப்பமான வடிவில் நறுக்கி வைக்கவும். பாலக் கீரை விழுது, டொமேட்டோ பியூரி, குங்குமப்பூ கலந்த பால் இந்த மூன்றையும் தனித்தனி பவுல்களில் ஊற்றி வைக்கவும். இவை மூன்றிலும் சரிசமமாக பனீர் துண்டுகள், உப்பு, வெள்ளை மிளகு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனை எண்ணெயில் தனித்தனியாகப் பொரித்து எடுக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

 

இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தயிர் மற்றும் டொமேட்டோ பியூரி சேர்த்து கிரேவி பதத்துக்குக் கிளறிவிடவும். தேவையான தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த பாஸ்மதி சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும். இதில் பொரித்தெடுத்த பனீர், எலுமிச்சைச் சாறு, நெய் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை மற்றும் புதினா இலை தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment