மஷ்ரூம் பிரியாணி
மஷ்ரூம் பிரியாணி
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
மஷ்ரூம் - 400 கிராம் (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
பச்சைப் பட்டாணி - 150 கிராம்
வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தண்ணீர் - தேவையான அளவு
தக்காளி - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
புதினா இலை - 50 கிராம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
நெய் - 50 மில்லி
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
அன்னாசிப்பூ - 2
செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தயிர் மற்றும் தக்காளி சேர்த்து கிரேவி பதத்துக்குக் கிளறவும். இத்துடன் மஷ்ரும், பச்சைப் பட்டாணி, பாஸ்மதி அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்்தழை, புதினா தூவி நெய் ஊற்றி கிளறி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து, தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment