கோதுமை உப்புமா பிரியாணி
கோதுமை உப்புமா பிரியாணி
தேவையானவை:
மட்டன் (அ) சிக்கன் - கால் கிலோ
கோதுமைக் குருணை - 2 கப்
நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சின்னவெங்காயம் - அரை கைப்பிடி (நறுக்கியது)
பெரியவெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 (கீறியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைப்பட்டாணி - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காயப்பால் - 4 கப்
முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடாக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வெடிக்க விடவும். இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு, இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். கூடவே பச்சைப்பட்டாணி, பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை ஒன்றன் பின் ஒன்றாக மசிய வதக்கி மட்டன்/சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும். மட்டனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். தேங்காய்ப்பால் ஊற்றி, மட்டனை வேக விடவும். மட்டன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும். கோதுமையும் கறிகுழம்பும் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும். கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

No comments:
Post a Comment