Saturday, 24 September 2016

கொண்டைக்கடலை பிரியாணி

கொண்டைக்கடலை பிரியாணி


கொண்டைக்கடலை பிரியாணி

 

தேவையானவை:

 

 பாசுமதி அரிசி (வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்) - ஒரு கப்

 வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப்

 தக்காளி - 3

 பெரியவெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)

 பூண்டு - 3 பல் (நறுக்கியது)

 பச்சைமிளகாய் - 4

 தேங்காயப்்பால் - ஒன்றரை கப்

 கஸூரி மேத்தி - ஒரு டேபிள்ஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 சர்க்கரை - கால் டீஸ்பூன்

 பட்டை - ஒன்று

 கிராம்பு - 2

 ஏலக்காய் - 2

 பிரிஞ்சி இலை - ஒன்று

 நெய் - 3 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - கால் கப் (நறுக்கியது)

 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 

அரைக்க:

 

 பெரியவெங்காயம் - ஒன்று

 காய்ந்தமிளகாய் - 8

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 பூண்டு - 5 பல்

 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

வெள்ளைக் கொண்டைக்கடலையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு அவித்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி, ஆறவிட்டு மிக்ஸியில் மை போல அரைக்கவும். தக்காளியை சுடுநீரில் முழுதாகச் சேர்த்து நோல் நீக்கி சதைப்பகுதியை மட்டும் அரைத்து வைக்கவும். பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடித்து, ஒரு டீஸ்பூன் சூடான நெய்யில் வறுத்து வைக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலையைச் சேர்த்து வெடிக்க விடவும்.

நறுக்கிய பூண்டுப்பல் சேர்த்து சிவக்க வறுக்கவும். பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு அரைத்த மசாலா விழுது, அரைத்த தக்காளி விழுது உப்பு, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். இத்துடன் அவித்த கொண்டைக்கடலை, கஸுரி மேத்தி, கரம் மசாலாத்தூள், ஒன்றரை கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு சரிபார்த்து வறுத்த அரிசியைச் சேர்த்துக் கிளறி வேக விடவும். இத்துடன் நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி உருளைக்கிழங்கு சிப்ஸ் உடன் பரிமாறவும்.

 

பின்குறிப்பு:

 

விருப்பமுள்ளவர்கள் நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து மேலே தூவிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment