Thursday, 29 September 2016

பருப்பு அடை தோசை

பருப்பு அடை தோசை

பருப்பு அடை தோசை

  

துவரம்பருப்பு, பச்சைப் பயறு - தலா 100 கிராம்

 கடலைப்பருப்பு - 50 கிராம்

 கொள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன்

 பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 100 கிராம்

 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 பூண்டு - 5 பல்

 இஞ்சி - சிறிதளவு

 தேங்காய் - அரை மூடி (துருவவும்)

 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று

 கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் - சிறிதளவு

 காய்ந்தமிளகாய், உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு

 

செய்முறை:

3 மணி நேரம் ஊறவைத்த துவரம்பருப்பு, பாசிப்பயறு, கடலைப்பருப்பு, கொள்ளு, பச்சரிசி, புழுங்கல் அரிசியுடன்... இஞ்சி, பூண்டுபெருங்காயத்தூள், சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை, தக்காளி, உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையையும் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment