சாம்பார்
சாம்பார்
தேவையானவை:
துவரம்பருப்பு - 100 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 2
நீளமாக நறுக்கிய கத்திரிக்காய் - 100 கிராம்
துண்டுகளாக்கிய முருங்கைக்காய் - 2
நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 20
புளி - சின்ன எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும். பருப்பைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள், விளக்கெண்ணெய் சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும் இத்துடன் தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய், வெங்காயம் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றவும். பிறகு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து காய்கள் வேகும் வரை கொதிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment