Saturday, 24 September 2016

பணியாரம்

பணியாரம்

பணியாரம்

 

தேவையானவை:

 

மூங்கில் அரிசி  ஒரு கப்

 

இட்லி அரிசி  ஒரு கப்

 

ஜவ்வரிசி  ஒரு கப்

 

உளுந்து  கால் கப்

 

வெந்தயம்  ஒரு டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

கடுகு, உளுத்தம்பருப்பு,

 

கடலைப்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்

 

வெங்காயம்  ஒன்று

 

பெருங்காயம்  ஒரு சிட்டிகை

 

பச்சைமிளகாய்  2

 

கறிவேப்பிலை  சிறிதளவு

 

எண்ணெய்  தேவையான அளவு

 

இஞ்சித்துருவல்  ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி, இட்லி அரிசியை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊறவிடவும். இதே போல், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகவும், ஜவ்வரிசியை தனியாகவும் தலா 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எல்லாவற்றையும் தண்ணீரை இறுத்து கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 6 மணி நேரம் புளிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், சிறிது உப்பு சேர்த்து வதக்கி மாவில் சேர்த்துக் கிளறவும். பிறகு குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி, குழிகளில் எண்ணெய் ஊற்றவும். மாவை குழிகளில் ஊற்றி, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்தால், மூங்கில் அரிசி குழிப்பணியாரம் ரெடி. கார சட்னியுடன் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment