Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பத்தியக் குழம்பு

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பத்தியக் குழம்பு

தேவையானவை:

 பூண்டு - 5 பல்

 புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

 வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 வெல்லம் - அரை  டீஸ்பூன்

 நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க:

 தேங்காய் - 2 சிறிய துண்டுகள்

 பூண்டு - 5 பல்

 வெந்தயம் - கால் டீஸ்பூன்

 சீரகம் - அரை  டீஸ்பூன்

 மிளகு - 2 டீஸ்பூன்

செய்முறை:

புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு:

தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில்பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.

No comments:

Post a Comment