தேவையானவை:
பூண்டு - 100 கிராம்
பசும்பால் - 500 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டை உரித்துக்கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வேகவிடவும். பூண்டு வேக சற்று நேரம் எடுக்கும். எனவே, தீயை மிதமாக்கிக்கொள்ளவும். பூண்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது உப்பு சேர்க்கவும். சாப்பிட சூப் போல இருக்கும் இப்பாலைப் பருகி, பூண்டுகளைச் சாப்பிடவும்.
குறிப்பு:
நன்றாக வேகவில்லை என்றால் பூண்டு காரமாக இருக்கும் என்பதால், வேகும்வரை காத்திருக்க வேண்டும். இதைப் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை பிறந்த முதல் மாதத்தில் அடிக்கடி பருகி வர, பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஏற்கெனவே பால் சுரப்பு சீராக உள்ள தாய்மார்களுக்கு இது தேவையில்லை.
No comments:
Post a Comment