தேவையானவை: வாழைப்பழத் துண்டு, பொடியாக நறுக்கிய பேரீச்சை - தலா 1 கப், வெல்லம், நெய் - தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன், முந்திரி - சிறிதளவு.
செய்முறை: பேரீச்சம் பழம் மற்றும் வாழைப்பழத் துண்டுகளை வாணலியில் போட்டு நன்றாகக் கிளறி எடுத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அரைத்த கலவையுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து, அடுப்பை குறைந்த தணலில் வைத்து இறுகும் வரை கிளற வேண்டும். இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவிப் பரிமாற வேண்டும்.
பலன்கள்: உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தம் விருத்தியாகும்.
No comments:
Post a Comment