தேவையானவை: வாழைப்பழத் துண்டுகள், பாசிப் பருப்பு - தலா 1 கப், பால் - 1/2 கப், தேங்காய் விழுது - 1/4 கப், வெல்லம் - 3/4 கப், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 2, நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப் பருப்பை குழைய வேகவைத்து, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்க வேண்டும். பாசிப் பருப்புடன், வதக்கிய வாழைப் பழம், தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை லேசாகக் கிளறிவிடவும். பின், ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: புரதம், மாவுச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் இருக்காது.
No comments:
Post a Comment