Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பூண்டு - கீரை - பருப்பு மசியல்

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பூண்டு - கீரை - பருப்பு மசியல்


தேவையானவை:

 பூண்டு - 8 பல்

 பாசிப்பருப்பு - அரை கப்

 பசலைக்கீரை - 2 கப்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பூண்டை உரித்துக்கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நறுக்கிய கீரை, பாசிப்பருப்பு, சீரகம், உரித்த பூண்டு சேர்த்து, கால் கப்  தண்ணீர் சேர்த்து நன்றாக மசியும்வரை வேகவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது கரண்டியால் மசித்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:

பொதுவாக பருப்பு சமையலை பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும்போது தாய்க்கும் சேய்க்கும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம் என்பதால், அவற்றுடன் கண்டிப்பாக பூண்டு, சீரகம் அல்லது பெருங்காயம் சேர்த்துச் சமைக்க வேண்டும். பாசிப்பருப்பு வாயுத் தொல்லை கொடுக்காது என்பதால், மற்ற பருப்புகள் தவிர்த்து பாசிப்பருப்பு சேர்க்கலாம். பிரசவ நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கினால் இரும்புச்சத்து இழந்த தாய்மார்களுக்குக் கீரை சிறந்த உணவு.

No comments:

Post a Comment