Saturday 8 October 2016

உளுத்தம் சுவாலை

உளுத்தம் சுவாலை

உளுத்தம் சுவாலை

 

உளுத்தம் சுவாலை எனப்படுவது ஈழத்து உணவுகளில் ஓர் இனிப்புச் சிற்றுண்டி. இது அதிக புரதச்சத்தைக் கொண்ட உணவு. காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கும், வேலைக்குப் போகிறவர்களுக்கும் ஏற்ற உணவு. இதை குறுகிய நேரத்தில் தயாரித்து விடலாம்.

 

தேவையானவை:

 

 வறுத்த அரிசி மாவு - ஒரு கப்

 வறுத்து அரைத்த உளுந்து மாவு - அரை கப்

 வறுத்த பாசிப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்

 பனை வெல்லம் - கால் கப்

 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 தேங்காய்த் துருவல் - கால் கப்

 உப்பு - சிறிதளவு

 

செய்முறை:

 

உளுந்து மாவு, அரிசி மாவு, பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, கையில் ஒட்டாத அளவுக்கு பிசையவும். இதை இடியாப்ப அச்சில் இட்டு இட்லித் தட்டில் பிழிந்து... இட்லி சட்டியில் வைத்து 20 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த இடியாப்பத்தை உதிர்த்து வெண்ணெய், தேங்காய்த்துருவல், பனை வெல்லம் சேர்த்தால், மணம் கமழும் சத்தான உணவு தயார்.

 

No comments:

Post a Comment