Friday, 7 October 2016

ஆலூ ‘தம்’ பிரியாணி

ஆலூ 'தம்' பிரியாணி

ஆலூ 'தம்' பிரியாணி

 

தேவையானவை:

 

பாஸ்மதி அரிசி - 300 கிராம்

 

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

 

சீரகம் - அரைடீஸ்பூன்

 

பிரியாணி இலை - 1

 

அன்னாசிப்பூ - 1

 

தயிர் - 200 மில்லி

 

காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 

இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 

நெய் - 50 மில்லி

 

எண்ணெய் - 50 மில்லி

 

பச்சை மிளகாய் - 4 (இரண்டாக உடைக்கவும்)

 

புதினா - அரை கைப்பிடி

 

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

 

எலுமிச்சைப்பழம் - 1

 

உப்பு - தேவையான அளவு

 

வெங்காயம் - 2 (அரை நிலா வடிவத்துக்கு வெட்டவும்)

 

தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)

 

சிறிய உருளைக்கிழங்கு  (பேபி பொட்டேட்டோ) - 12 (வேக வைத்து தோல் நீக்கியது)

 

குங்குமப்பூ - சிறிதளவு (1 டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)

 

செய்முறை:

 

பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம்  தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, தயிர், உருளைக்கிழங்கு, காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஊற வைத்து வடிகட்டிய அரிசியை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து குங்குமப்பூ ஊறிய பாலை ஊற்றி, மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து இருபது நிமிடம் வேக விடவும். பின்பு மூடியைத் திறந்து நெய் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment