பனீர் பட்டர் மசாலா
பனீர் பட்டர் மசாலா
தேவையானவை:
பனீர் - 12 க்யூப்ஸ்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 1 (அரை நிலா வடிவத்துக்கு நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
முந்திரி - 8 (வெந்நீரில் சிறிது ஊறப்போட்டு அரைத்த பேஸ்ட்)
கஸூரி மேத்தி - 1 டீஸ்பூன் (காய்ந்த வெந்தய இலைகள்)
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, அடுப்பை அணைத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த வெங்காயம், தக்காளி விழுது சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். பிறகு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து சிம்மில் வைத்து வேக விடவும். பிறகு பனீரை சேர்த்து எட்டு நிமிடம் கழித்து, முந்திரி விழுது, கஸூரி மேத்தியைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இந்த மலாசாவை சப்பாத்தி, நான், ரொட்டி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment