ராகி அம்மினி கொழுக்கட்டை (ராகி கொழுக்கட்டை)
ராகி அம்மினி கொழுக்கட்டை (ராகி கொழுக்கட்டை)
கொழுக்கட்டை செய்ய:
ராகி மாவு - 75 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 25 கிராம்
இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ராகி மாவில் உப்பு சேர்த்து கலந்து ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை சிறிது சிறிதாக ராகி மாவில் ஊற்றி மரக்கரண்டி அல்லது மர ஸ்பூனால் கட்டி விழாமல் கிளறவும். இதை மூடி போட்டு ஐந்து நிமிடம் தனியாக வைக்கவும். பின்பு கைகளில் எண்ணெய் தடவிகொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.
அடுப்பில் இட்லி குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டை வைத்து துணி விரித்து, உருட்டியவற்றை தட்டில் வைத்து மூடி போட்டு, பத்து நிமிடம் வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது வதக்கி, பெருங்காயத்தூள், வேகவைத்த கொழுக்கட்டை (முழுதாக சேர்க்கவும் உதிர்க்க வேண்டாம்), மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மெதுவாகப் புரட்டி இரண்டு நிமிடம் வதக்கவும். அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment