மேத்தி பாலக், பனீர் - மட்டர் சப்ஜி
மேத்தி பாலக், பனீர் - மட்டர் சப்ஜி
இந்த சப்ஜி குளிர்காலத்தில் காய்கள் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் போது கண்டிப்பாக எல்லா வீடுகளிலும் செய்வார்கள்.
என்னென்ன தேவை?
தில்லி பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு,
வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு,
பனீர் - 100 கிராம்,
வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்,
வெங்காயம், தக்காளி பெரியது - தலா 1,
முழு முந்திரிப்பருப்பு - 6,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத்தூள்,
கரம் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிப்பதற்கு...
சீரகம், எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
முந்திரியை ஊறவைத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைக்கவும். வெந்தயக் கீரையை பொடிக்கவும். கொதிக்கும் தண்ணீரில் 1 டீஸ்பூன் சர்க்கரை கலந்து அதில் பாலக்கீரையை போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும். தண்ணீரை வடித்து ஐஸ் தண்ணீரில் போட்டு பிழிந்து அரைக்கவும். அதே போல் பனீரையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுக்கவும். மேல் கொடுத்த பொடிகள் அனைத்தையும் சேர்க்கவும்.
தாளிக்க...
கடாயை காய வைத்து வெண்ணெய் / எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது, முந்திரி மற்றும் வெந்தயக்கீரை, பொடிகள் அனைத்தையும் சேர்த்து கொதித்து வரும்போது பாலக், பனீர், பட்டாணி, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு:
எண்ணெய்/வெண்ணெய் கலந்து சேர்க்கலாம். மேலும் ரிச்சாக இருக்க க்ரீம் சேர்க்கலாம்
No comments:
Post a Comment