புரோக்கோலி பாலக் கூட்டு
புரோக்கோலி பாலக் கூட்டு
தேவையானவை:
பாசிப்பருப்பு - அரை கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 2 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
புரோக்கோலி - ஒரு கப்
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
துருவிய தேங்காய் - கால் கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 (பாதியாக உடைக்கவும்)
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைக்கவும். பாசிப்பருப்பைக் கழுவி வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு கடாயில் மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூளுடன் சேர்த்து வேக விடவும். பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் வெங்காயம், தக்காளி, புரோக்கோலி, பாலக்கீரை, அரைத்த தேங்காய்க் கலவை சேர்த்துக் கலக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். வெந்தததும் எடுத்துத் தனியாக வைத்து விட்டு, அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment