முட்டை பனீர் பொடிமாஸ்
முட்டை பனீர் பொடிமாஸ்
தேவையானவை:
முட்டை - 3
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சைமிளகாய் - ஒன்று (கீறியது)
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
பனீர் - 50 கிராம் (உதிர்த்தது)
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பனீர், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையைச் சேர்த்து, முட்டை பொடி பொடியாக ஆகும் வரை அடிபிடிக்காமல் கிளறி கடைசியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment