Tuesday, 27 September 2016

செட்டிநாடு சிக்கன் கிரேவி

செட்டிநாடு சிக்கன் கிரேவி

செட்டிநாடு சிக்கன் கிரேவி

 

தேவையானவை:

 சிக்கன் - ஒரு கிலோ

 மிளகு மற்றும் சீரகத்தூள் - 5 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க:

 கடலை எண்ணெய் - 100 மில்லி

 சோம்பு - ஒரு கிராம்

 பட்டை - ஒரு கிராம்

 கிராம்பு - ஒரு கிராம்

 அன்னாசிப்பூ - ஒரு கிராம்

 ஏலக்காய் - ஒரு கிராம்

 பிரிஞ்சி இலை - 1

 

வதக்க:

 சின்ன வெங்காயம் - 150 கிராம் (இரண்டாக நறுக்கவும்)

 பெரிய வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 கறிவேப்பிலை - 2 கிராம்

 பூண்டு விழுது - 30 கிராம்

 இஞ்சி விழுது - 20 கிராம்

 மஞ்சள்தூள் - 2 கிராம்

 தக்காளி - 75 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம்

 மிளகாய்த்தூள் - 30 கிராம்

 புளிக்கரைசல் / எலுமிச்சைச்சாறு - 2 ஸ்பூன்

 

தேங்காய் மசாலா தயாரிக்க:

 அரை மூடி தேங்காய் - துருவிக் கொள்ளவும்.

 முந்திரி - 20 கிராம்

 கசகசா - 10 கிராம்

கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, முந்திரி, தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

 

கோழி மசாலா தயாரிக்க:

 சோம்பு - 4 சிட்டிகை

 சீரகம் - 3 சிட்டிகை,

 மிளகு - 15 கிராம்,

 பட்டை - ஒரு துண்டு

 கிராம்பு - 2

 ஏலக்காய் - 1

இவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.

 

செய்முறை:

சிக்கனை பெரிய பீஸ்களாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வதக்கக் கொடுத்தவற்றில் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கியதும், மஞ்சள்தூள், தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கோழி மசாலா சேர்த்து வதக்கவும். இதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா சேர்த்து வதக்கி, உப்பு, சிக்கனை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். சிறிது நேரம் கழித்து புளித்தண்ணீர்/எலுமிச்சைச் சாறு சேர்த்து வேக விடவும். இறுதியாக மிளகு மற்றும் சீரகத்தூள் தூவி அடுப்பை அணைக்கவும்.

No comments:

Post a Comment