பேபிஃகார்ன் பிரியாணி
பேபிஃகார்ன் பிரியாணி
தேவையானவை:
பாஸ்மதி அரிசி -அரை கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
ஃப்ரெஷ் பேபிஃகார்ன் - 15
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -200 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 6
பொடியாக நறுக்கிய தக்காளி - 150 கிராம்
திக்கான தேங்காய்ப் பால் - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள்(தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -50 மில்லி
நெய்-50 மில்லி
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை-1
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
புதினா இலை - 50 கிராம்
செய்முறை:
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பேபிஃகார்ன் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஊற வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவிடவும். நெய் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி மூடி போடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்

No comments:
Post a Comment