காஸ்மீரியன் புலாவ்
காஸ்மீரியன் புலாவ்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
புதினா இலை - 50 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
எண்ணெய் - 100 கிராம்
நெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
குங்குமப்பூ - சிறிதளவு
உலர் திராட்சை - 10 கிராம்
ஆப்பிள் - ஒன்றில் பாதி (சிறு துண்டுகளாக்கவும்)
அன்னாசிப்பழம் - ஒன்றில் பாதி
திராட்சை - 50 கிராம்
பால் - 50 மில்லி
முந்திரி - 10 கிராம்
பாதாம் - 10 கிராம்
செய்முறை:
பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும். அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும். பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாஸ்மதி அரிசி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும். பிறகு முந்திரி, பாதாம், குங்குமப்பூ சேர்த்த பால், நெய் சேர்த்துக் கிளறவும். இத்துடன் ஆப்பிள், அன்னாசி, திராட்சை, உலர் திராட்சை, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment