நாகர்கோவில் உளுந்துசோறு
நாகர்கோவில் உளுந்துசோறு
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம்
பூண்டு - 20 பல்
வெந்தயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - கால் டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - கால் மூடி
செய்முறை:
அரிசியை ஊறவைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் கருகாமல் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிப் பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் வறுத்த உளுந்து, ஊறவைத்த அரிசி சேர்த்து இதை விட இரண்டு மடங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, வேகவைக்கவும். அரிசி, உளுந்து வெந்து தண்ணீர் வற்றியதும், எண்ணெய் ஊற்றிக் கிளறி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
நாகர்கோவில் உளுந்துசோறு
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம்
பூண்டு - 20 பல்
வெந்தயம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - கால் டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - கால் மூடி
செய்முறை:
அரிசியை ஊறவைத்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் கருகாமல் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிப் பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் வறுத்த உளுந்து, ஊறவைத்த அரிசி சேர்த்து இதை விட இரண்டு மடங்கு தண்ணீர், உப்பு சேர்த்து, வேகவைக்கவும். அரிசி, உளுந்து வெந்து தண்ணீர் வற்றியதும், எண்ணெய் ஊற்றிக் கிளறி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment