பச்சை பயறு குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
மல்லித் தூள் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் பச்சை பயறை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு , 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும்அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து,
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து , சிறிதளவு உப்பு போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி இந்த குழம்பு சப்பாத்தி தோசை இட்லிக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment