சுய்யம்
சுய்யம்
தேவையானவை:
மைதா - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 150 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 5 (தூளாக்கிக் கொள்ளவும்)
முந்திரி, பாதாம் பருப்பு - சிறிதளவு (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
உப்பு - கால் டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை குக்கரில் சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். வெல்லத்தை பொடித்து வைக்கவும். இதில் வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து கொரகொரப்பாக ஓட்டி எடுக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு சேர்த்துக் கிளறி, சிறிய எலுமிச்சை வடிவ உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா, மஞ்சள்தூள், பேக்கிங் சோடா, உப்பு, ஏலக்காய்த்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டிய பருப்பு உருண்டையை எடுத்து மைதாவில் முக்கி எண்ணெயில் மெதுவாக இட்டு வேக விடவும். சுய்யம் பிரவுன் நிறம் ஆனதும், ஜல்லிக்கரண்டியால் எடுத்து பேப்பர் டவலில் வைத்து ஆற விட்டுப் பரிமாறவும். இப்படி மீதம் இருக்கும் அனைத்து உருண்டைகளையும் வேகவிட்டு எடுக்கவும்.

No comments:
Post a Comment