மிக்ஸ்ட் ஸீ ஃபுட் பிரியாணி
மிக்ஸ்ட் ஸீ ஃபுட் பிரியாணி
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
வஞ்சிரம் மீன் - 150 கிராம் (சிறு துண்டுகளாக்கவும்)
இறால் - 150 கிராம்
நண்டு சதை - 150 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5
தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தயிர் - 50 மில்லி
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
புதினா இலை - 50 கிராம்
எலுமிச்சைப்பழம் - 2 (சாறு எடுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
எண்ணெய் - 200 மில்லி.
நெய் - 50 மில்லி
குங்குமப்பூ - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி.
செய்முறை:
மீன், இறால், நண்டை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்த்து உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும். இத்துடன் ஊற வைத்து தண்ணீர் இறுத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் மீன், இறால், நண்டின் சதைப்பகுதியை சேர்த்து கலந்து
30 நிமிடம் ஊறவைக்கவும்.அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும். இத்துடன் தயிர் சேர்த்து வதக்கி, சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் ஊற வைத்த மீன், இறால் மற்றும் நண்டு, உப்பு, தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இதில் வெந்த சாதத்தை மெதுவாக கலந்து நெய் ஊற்றி கிளறி குங்குமப்பூ, கொத்தமல்லித்தழை, புதினா தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, இதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் 'தம்' போட்டு இறக்கிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment