Thursday 29 September 2016

வவ்வால் மீன் பிரியாணி

வவ்வால் மீன் பிரியாணி

வவ்வால் மீன் பிரியாணி

தேவையானவை:

 வவ்வால் மீன் (பாம்ஃபிரட்) - அரை கிலோ

 பாஸ்மதி அரிசி - அரை கிலோ

 இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்

 மிளகாய்த்தூள் - 30 கிராம்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 20 கிராம்

 மஞ்சள் தூள் - 10 கிராம்

 தயிர்- கால் கப்

 தக்காளி - 50 கிராம்

 புதினாஇலை - 50 கிராம்

 கொத்தமல்லித்தழை - 50 கிராம்

 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)

 கரம்மசாலாத் தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 ஏலக்காய் - 2

 கிராம்பு - 4

 பட்டை - ஒன்று

 முந்திரி - அரை டேபிள்ஸ்பூன்

 உலர் திராட்சை - அரை டேபிள்ஸ்பூன்

 நெய் - 50 மில்லி

 தேங்காய் எண்ணெய் - 100 மில்லி

 

செய்முறை:

பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து  நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஊறிய பாஸ்மதியைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து மீனில் இந்தக் கலவையைத் தடவி 15  நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கி தயிர், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் ஊறவைத்த மீனைச் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும். இதை வெந்த சாதத்தோடு மெதுவாக அரிசி உடையாத அளவுக்குக் கலக்கவும்.  இதில் நெய் ஊற்றி கிளறி, கொத்தமல்லிதழை, புதினா, முந்திரி, உலர் திராட்சை தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் 'தம்' போட்டு இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment